கடந்த 24 மணி நேரத்தில் 2025 உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான 30 முறைப்பாடுகளை இலங்கை பொலிசார் பெற்றுள்ளது.
முறைப்பாடுகளில், 09 தேர்தல் வன்முறை தொடர்பானவை மற்றும் 21 தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என பொலிசார் கூறினர்.
இந்தக் காலகட்டத்தில் ஒரு வேட்பாளரும் ஏழு ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், மார்ச் 03 முதல் ஏப்ரல் 28 வரை மொத்தம் 398 தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை பொலிசார் பெற்றுள்ளனர்.
இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 30 வேட்பாளர்களும் 131 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், 31 வாகனங்கள் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
Link: https://namathulk.com/
