போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தேசிய போக்குவரத்து ஆணைக்கழு, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ஒன்பது மாகாணங்களின் பயணிகள் போக்குவரத்து அதிகாரிகளின் தலைவர்களுடன் ஒரு விசேட கலந்துரையாடலை நடத்தினார்.
இதனைத்தொடர்ந்து, இலங்கையின் பயணிகள் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்துவதற்கும் நவீனமயமாக்குவதற்கும் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.
எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளில் பின்வருவன அடங்கும்:
– புத்தளம் பாதையில் ஒருங்கிணைந்த கால அட்டவணையை உடனடியாக செயல்படுத்துதல்.
– 138 வழித்தடத்தில் ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்குதல், இலாபப் பகிர்வு பொறிமுறையுடன் ஒரே சங்கத்தின் கீழ் அனைத்து பஸ்களையும் இயக்குதல்.
– அனைத்து பஸ்களிலும் GPS கண்காணிப்பு மற்றும் CCTV கேமராக்களை கட்டாயமாக நிறுவுதல்.
– டிஜிட்டல் அமைச்சுடன் இணைந்து ஒன்லைன் டிக்கெட் முன்பதிவு முறையை உருவாக்குதல்.
– பஸ் ஓட்டுநர்களுக்கு போதைப்பொருள் மற்றும் மதுபான சோதனையை நடத்துதல்.
– டிக்கெட் இயந்திரங்கள் மூலம் டிக்கெட் வழங்குவதை கட்டாயமாக்குதல்.
– பயணிகள் பஸ்களுக்கான விவரக்குறிப்புகளை நிறுவுதல்.
– பஸ் ஓட்டுநர்கள் இருக்கை பெல்ட்களை கட்டாயமாகப் பயன்படுத்துதல்.
– புதிய பஸ்களுக்கு புதிய வழித்தடங்களை ஒதுக்குவதற்கான ஒரு பொறிமுறையை அறிமுகப்படுத்துதல்.
– அனைத்து பஸ்களிலும் பயணிகள் விதிமீறல்களை முறைப்பாடளிக்க கூடிய வகையில்ஒன்பது மாகாணங்களுக்கும் தனித்தனி வாட்சப் எண்களை அறிமுகப்படுத்தல்.
இந்த முடிவுகளை செயல்படுத்துவதற்குத் தேவையான ஆரம்ப பணிகளை விரைவுபடுத்துமாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து கண்காணிப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
Link: https://namathulk.com/
