பதிவு செய்யப்படாத வாகனங்களைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று முன்னாள் அமைச்சர்கள் மீது விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
பேருவளையில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது, உத்தியோகப்பூர்வ இறக்குமதி தடையின் போது இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதில் இந்த நபர்கள் ஈடுபட்டதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன், முறையான பதிவு இல்லாமல் வாகனங்களைப் பயன்படுத்தியதற்காக மூன்று முன்னாள் அமைச்சர்களும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
Link: https://namathulk.com/
