35 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை பலாலிக்கு இடையிலான அரச பஸ் சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யுத்தம் காரணமாக கடந்த 35 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட குறித்த பகுதியூடாக பொதுமக்கள் நடமாட முடியாத நிலை காணப்பட்டது.
இதன் காரணமாக பயணிகள் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரை மாத்திரமே பயணம் செய்து வந்தனர்.
கடந்த 10ஆம் திகதி நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட பலாலி வீதி வரை இன்றையதினம் பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் பவானந்தராஜா, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ஜீவக புரசிங்க, மற்றும் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Link: https://namathulk.com/
