வெப்பமண்டல ஒருங்கிணைப்பு காரணமாக இன்று சில மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கமைய, பெரும்பாலான இடங்களில் பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மி.மீ வரையான பலத்த மழை பெய்யக்கூடும்.
இதற்கிடையில், தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மிகவும் கொந்தளிப்பான கடல் எதிர்பார்க்கப்படுகிறது.
Link: https://namathulk.com/
