இந்திய – பாகிஸ்தான் உக்கிர செயற்பாட்டால் ஆபத்துக்குள்ளாகும் இலங்கையின் பொருளாதாரம் – ஒரு பார்வை.

Aarani Editor
1 Min Read
பொருளாதாரம்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் இராணுவ பதற்றங்கள் இலங்கையின் விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இதன் காரணமாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிக செயல்பாட்டுச் செலவுகளை எதிர்கொள்கிறது மற்றும் கொழும்பு துறைமுகம் டிரான்ஷிப்மென்ட் வருமானத்தை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்கிறது என ஆஷா செக்யூரிட்டீஸ் ரிசர்ச் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.

ஐரோப்பா செல்லும் விமானங்கள் மூடப்பட்ட பாகிஸ்தான் வான்வெளியைச் சுற்றி மாற்றுப்பாதையில் செல்வதால், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எரிபொருள் செலவுகள் உயரக்கூடும், இது செயல்பாட்டு சவால்களை அதிகரிக்கிறது.

அத்துடன் சுற்றுலா மீட்சியையும் அச்சுறுத்துகிறது.

இந்தியா, இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 20 சதவீதத்தை பங்களிக்கிறது.

எனினும், பாதுகாப்பு கவலைகள் அல்லது பயண இடையூறுகள் காரணமாக இந்திய பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது, 2025 இல் இந்தத் துறையின் மீட்சியைக் குறைக்கலாம் எனவும் குறித்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பு, துபாய் உள்ளிட்ட டிரான்ஷிப்மென்ட் என்ற இடை மையங்கள் ஊடாக பாகிஸ்தானுக்கு இந்திய பொருட்களை மறு ஏற்றுமதி செய்வதை நிறுத்துமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது.

எனவே, கொழும்பின் இலாபகரமான டிரான்ஷிப்மென்ட் வணிகத்தில் ஒரு பகுதியை இழக்க நேரிடும்.

அத்துடன், குறுகிய கால வர்த்தக இடையூறுகள் சாத்தியமில்லைஇ ஆனால் நீடித்த விரோதங்கள் இலங்கையின் சுற்றுலா துறையில் அழுத்தங்களை அதிகரிக்கக்கூடும் என ஆஷா செக்யூரிட்டீஸ் குறிப்பிட்டது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *