கனமழையால் நிரம்பி வழியும் பிரதான நீர்த்தேக்கங்கள்.

Aarani Editor
1 Min Read
Heavy Rain

நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 24 முக்கிய நீர்த்தேக்கங்கள் தற்போது நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் 6 நீர்த்தேக்கங்களும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 6 நீர்த்தேக்கங்களும், அனுராதபுரம் மாவட்டத்தில் 4 முக்கிய நீர்த்தேக்கங்களும், பதுளை, குருநாகல், மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தலா 2 நீர்த்தேக்கங்கள் என மொத்தம் 24 நீர்த்தேக்கங்கள் இவ்வாறு நிரம்பி வழிவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பிரதான நீர்த்தேக்கங்களுக்கு மேலதிகமாக 16இற்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிவதாக சுட்டிக்காட்டிய நீர்பாசனத் திணைக்களம், தொடர்ந்து நீர் நிரம்பி வழிந்தாலும் நீர்த்தேக்கங்களில் மொத்த நீர் சேமிப்பு திறனில் 91 சதவீதத்தை வெற்றிகரமாக தக்க வைத்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *