யாழ் மாவட்டத்தில் இராணுவத்தின் பிடியிலிருந்த ஒருதொகுதி காணிகள் விடுவிப்பு.

Aarani Editor
1 Min Read
Land Release

யாழ் மாவட்டத்தில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்துவந்த ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கபட்டு மக்களின் பயன்பாட்டிற்காக இன்றையதினம் ஒப்படைக்கப்படன.

யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மானத ஜெகம்பத்தால், யாழ் மாவட்ட செயலர் பிரதீபன் அவர்களிடம் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் இன்றையதினம் முற்பகல் 11.30 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

வலி வடக்கு வயாவிளான் பகுதியில் 20 ஏக்கர் காணிகளும் மாங்கொல்லை பகுதியில் 15 வடமராட்சி கற்கோவளம் பகுதியில் 5.7 ஏக்கர் காணி நிலமுமாக சுமார் 40.7 ஏக்கர் காணி நிலங்கள் விடுவிக்கப்பட்டதா யாழ் மாவட செயலாளர் தெரிவித்தார்.

இதையடுத்து தெல்லிப்பளை ஜே/233 பகுதியில் 47 குடும்பங்களும், வயாவிளான் பகுதியில் 55 குடும்பங்களும் தமது பூர்வீக நிலங்களுக்கு செல்லவுள்ளனர்

இதேவேளை குறித்த காணிகளில் வெடிபொருட்கள் அபாயம் தொடர்பில், ஆராயப்பட்டு அதன் பின்னர் மக்கள் செல்ல அனுமதிக்கப்படுவர்.

இதேவேளை மேலும் சில காணிகளும் விரைவில் விடுவிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *