ஜனாதிபதியின் வியட்நாம் பயணம்.

Aarani Editor
1 Min Read
Anurakumara

வியட்நாம் ஜனாதிபதி லுவாங் குவோங்கின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மே 04 திகதி முதல் 06 மே; திகதி வரை வியட்நாமுக்கு உத்தியோகப்பூர்வமாக விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி வியட்நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை மேற்கொள்வார்.

மேலும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட மூத்த பிரமுகர்களையும் சந்திக்கவுள்ளார்.

ஹோ சி மின் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின விழாவில் ஜனாதிபதி பிரதம விருந்தினராகவும் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்துவார் என இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது இரு தரப்பினரும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு 55 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளைக் குறிக்கும் வியட்நாம் விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை மேலும் பலப்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *