தமிழர்களின் உரிமையை உறுதிப்படுத்தியே தீருவேன் – ஜனாதிபதி அநுர உறுதி.

Aarani Editor
1 Min Read
May day Anura

தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பாமல் எம்மால் முன்னோக்கிச் செல்ல முடியாது எனவும் தேசிய ஒற்றுமைக்குரிய நேசக்கரத்தை தமிழ் மக்கள் நீட்டியுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இம்முறை ‘நாட்டைக் கட்டியெழுப்பும் மக்கள் சக்தி அணிதிரளும் என்ற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் மே தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது, ஜனாதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அவர்களை ஒருபோதும் கைவிடக் கூடாது.

எனவே தமிழர்களின் அனைத்து உரிமைகளும் உறுதிப்படுத்தப்படும்.

அத்திபாரம் இல்லாத நாடொன்றே எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது.

எனவேஇ முன்னோக்கிச் செல்வதற்கு வலுவான அத்திபாரம் அவசியம்.

அதற்கான முழு முயற்சியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஊழல் அற்ற ஆட்சி நடக்கிறது.

அதேபோல தேசிய ஒற்றுமை எமக்கு மிக முக்கியம்.

தேசிய இனங்களுக்கு இடையில் ஒற்றுமை இல்லாமல் முன்னோக்கிச் செல்ல முடியாது.

கடந்த தேர்தலின்போதுஇ தேசிய ஒற்றுமைக்கான பயணத்தில் எம்மைவிட வேகமான ஓர் அடியை தமிழ் மக்கள் முன்வைத்தனர்.

வடக்குஇ கிழக்கில் நாம் குறைந்தளவிலேயே அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளோம்.

தமிழ்மொழியிலான முழுமையான தொடர்பாடலும் இருக்கவில்லை.

அப்படியிருந்தும் வடக்கில் இருந்த பாரம்பரிய கட்சிகள் மற்றும் தலைவர்களை நிராகரித்து எம்மீது மக்கள் நம்பிக்கை வைத்தனர்.

இது எதனை வெளிப்படுத்துகிறது?

தேசிய ஒற்றுமைக்கான தேவையே அது.

எனவேஇ தமிழ் மக்கள் முன்னோக்கி வைத்த காலை நாம் பின்? நோக்கி எடுக்கும் வகையில் செயற்படக் கூடாது.

அவர்களின் கலாசார உரிமைஇ மொழி உரிமைஇ பாரம்பரிய காணி உரிமைஇ இலங்கை பிரஜைகளாக வாழ்வதற்குள்ள அனைத்து அடிப்படை உரிமைகளும் உறுதிப்படுத்தப்படும்.

நாட்டை மீட்பதற்கான இரண்டாம் கட்ட நடவடிக்கைதான் இது.

இதனை செய்யாமல் நாட்டை மீட்டெடுப்பது பற்றி சிந்திக்க முடியாது.

பிரித்தாளும் அரசியலை தோற்கடித்து ஒற்றுமைக்கான அரசியலை மக்கள் வெற்றிப்பெற வைத்துள்ளனர்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *