அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் நினைவூட்டல்.

Aarani Editor
1 Min Read
Election

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்க அரசு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என இலங்கைத் தேர்தல் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஊதிய இழப்பு இல்லாமல் வாக்களிக்கும் விடுமுறையை உறுதி செய்யும் உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 84A இன் கீழ் முதலாளிகளின் கடமையை ஆணைக்கழு நினைவூட்டியது.

சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் முந்தைய அறிவிப்பை பின்பற்றத் தவறியதாக எழுந்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தேர்தல் ஆணையானளர், ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் தங்கள் ஊழியர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதற்கு வசதி செய்யுமாறு அனைத்து தொடர்புடைய நிறுவனங்களையும் வலியுறுத்தினார்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *