சென்னையிலிருந்து இன்று காலை இலங்கை வந்த விமானம் மற்றும் அதில் வந்த பயணிகள் விசேட சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் – பஹல்கம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 6 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் உள்ளதாக இந்தியாவிலிருந்து தகவல் கிடைத்துள்ளது
இதனையடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த பயங்கரவாதிகள் இலங்கைக்குள் புகுந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com/
