டேன் பிரியசாத் கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு கருவாத்தோட்டம் பகுதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) சார்பில் உள்ளூராட்சி தேர்தளில் போட்டியிட்ட வேட்பாளரும், “நவ சிங்களே தேசிய இயக்கத்தின்” ஒருங்கிணைப்பாளருமான டேன் பிரியசாத் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
வெல்லம்பிட்டி லக்ஸந்த செவன குடியிருப்பு தொகுதியில் தனது உறவினர் வீட்டில் இருந்த போது டேன் பிரியசாத் சுட்டுக்கொல்லப்பட்டார்.
Link: https://namathulk.com/
