IPL 2025 – ஹைதராபாத்தை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி

Aarani Editor
1 Min Read
IPL2025

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 38 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

குறித்த போட்டியின் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 224 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

225 எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

போட்டியின் ஆட்டநாயகனாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிரசித் கிரிஸ்ணா தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை மும்பை இந்தியன்ஸ் அணி 14 புள்ளிகளுடன் புள்ளி;ப்பட்டியலில் முதலிடத்திலுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் 14 புள்ளிகளுடன் முறையே 2ஆம் மற்றும் 3ஆம் இடங்களைப் பிடித்துள்ளன.

பஞ்சாப் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் 4ஆம் இடத்திலும் டெல்லி கெப்பிடல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திலும் காணப்படுகின்றது.

லக்னோ அணி 10 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் காணப்படும் அதேவேளை கொல்கத்தா அணி 9 புள்ளிகளுடன் 7ஆவது இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *