சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று இரவு 11.30 மணி வரை அமலில் இருக்கும் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கத்தால், ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com/
