இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக பெருந்தொகை கஞ்சாவை கடத்திய மூன்று பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் எழுவைதீவு கடற்பரப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகனபர்களிடமிருந்து 323.35 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பேசாலை பகுதியையும், மற்றைய இருவர் குருநகர் பகுதியையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Link: https://namathulk.com/
