மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையைவளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இன்று இரவு 11.30 மணி வரை அமலில் இருக்கும் வகையில் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com/
