தலைக்கவசம் அணிந்து நடமாடுவோருக்கு எச்சரிக்கை.

Aarani Editor
0 Min Read
Helmet User Caution

மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது, முகத்தை மறைக்கும் தலைக்கவசம் அணிந்திருப்பவர்களுக்கு இலங்கை பொலிஸ் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, குறித்த நபர்கள் தங்கள் அடையாளத்தை, உறுதிப்படுத்தாவிட்டால், அவர்களைக் கைது செய்யும் அதிகாரம் பொலிசாருக்கு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைக்கவசம் அணிந்திருக்கும் போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அனுமதி உண்டு என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேற்படி, சோதனைகளின் போது ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களுக்கு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

அவ்வாறு செய்யத் தவறுபவர்களைக் கைது செய்யும் அதிகாரம் அதிகாரிகளுக்கு உள்ளது எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *