கொட்டாஞ்சேனை மாணவி டில்ஷி அம்ஷிகாவின் மரணத்துக்கு நீதிக்கோரி இன்று வெள்ளிக்கிழமை மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
நேற்று இடம்பெற்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக கொழும்பு, கொட்டாஞ்சேனை, ஜோர்ஸ் ஆர்டி சில்வா மாவத்தை வீதியில் இப் போராட்டம் முன்னெடுக்கப்ட்டது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் நடை பவணியாக காலி முகத்திடலுக்கும் சென்று அமைதியான முறையில் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இதன்போது நூற்றுக்காணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
link: https://namathulk.com/
