வடக்கு மக்களுக்கான காணி உரிமை உறுதிப்படுத்தப்படும் – அமைச்சர் வசந்த சமரசிங்க

Aarani Editor
1 Min Read
Northern Province

வடக்கு மக்களுக்கான காணி உரிமை உறுதிப்படுத்தப்படும் அதேவேளை அவர்களுக்குரிய காணியை அவர்கள் சுதந்திரமாக பயன்படுத்த முடியும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் அரசாங்கமும், இராணுவமும் இணைந்து வடக்கில் இனவாதத்தை பரப்புவதாக கஜேந்திரகுமார் எம்.பி. குற்றஞ்சாட்டினார்.

இனவாதத்தை தோற்கடித்த அரசாங்கம்தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகும் என்பதை கூறிக்கொள்கின்றேன்.

அதேபோல வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கை ஒரு குடையின்கீழ் கொண்டுவந்த அரசாங்கமே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகும்.

எனவே, இந்நாட்டில் இனவாதத்துக்கு மீண்டும் இடமளிக்கப்படமாட்டாது.

இந்நிலையில் சில காரணங்கள் தொடர்பில் மாயையை தோற்றுவிக்க முற்படுகின்றனர்.

கடந்த காலங்களிலும் இப்படி நடந்துள்ளது.

எமது நாட்டில் காணிகளை கையகப்படுத்திய அரசியல்வாதிகள் பற்றியும் எதிர்காலத்தில் நாம் கதைப்போம்.

இந்நிலையில் வடக்கு மக்களுக்கான காணி உரிமை உறுதிப்படுத்தப்படும்.
அவர்களுக்குரிய காணியை அவர்கள் சுதந்திரமாக பயன்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *