பஸ் விபத்தில் 11 பேர் உயிரிழப்பு : சுமார் 30 பேருக்கு காயம் – கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் சம்பவம்

Aarani Editor
0 Min Read
Ramboda bus accident

ரம்பொட, கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரன்டிஎல்ல பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்களை அவசரமாக வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *