தமிழர் பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர் வீட்டின் மீது தாக்குதல்.

Aarani Editor
1 Min Read
House Attack

கிளிநொச்சி, அம்பாள் குளம் கிராமத்தில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர் வீட்டின் மீது நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இறுதியாக நடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது குறித்த வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் குறித்த வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர பிரச்சார நடவடிக்கைகள் ஈடுபட்ட ஆதரவாளர் ஒருவரின் வீட்டின் மீது நேற்று நள்ளிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குறித்த வீட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருக்கிறார்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் உரிய இடத்துக்கு விரைந்து சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *