2022 ஆம் ஆண்டு பாரிஸ் அருகே ஒரு கும்பல் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இலங்கை பாதாள உலகக் குழு தலைவரை நாடு கடத்த ஒன்ராறியோ நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
டொராண்டோ தெற்கு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரசன்ன நல்லலிங்கம், 30 நாட்களுக்குப் பிறகு, கனடாவின் நீதி அமைச்சரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் நிலையில், பிரான்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.
வழக்கின் ஒரு சர்ச்சைக்குரிய பதிவின்படி, செப்டம்பர் 21ஆம் திகதி 2022 அன்று, நல்லலிங்கம் ஆவா குழுவின் நான்கு உறுப்பினர்களுக்கு ஆயுதங்களை வழங்கி, பாரிஸின் வடக்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள லா கோர்னியூவ் என்ற கம்யூனுக்குச் சென்று, ஒரு கும்பலின் ‘வாகனத்தை அடித்து நொறுக்க’ அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Link: https://namathulk.com/
