தமிழர்களின் காணி சுவீகரிப்பு வர்த்தமானியை மீள பெறாவிட்டால் போராட்டம் முன்னெடுக்கப்படும் – சுமந்திரன் எச்சரிக்கை.

Aarani Editor
1 Min Read
Sumandiran

தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்படாவிட்டால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

இதன்போது, கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட குறித்த வர்த்தமானியை மீளப்பெறுமாறு கோரி ஏற்கனவே ஜனாதிபதிக்குத் தாம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் 28ஆம் திகதிக்குள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் மீளப் பெறப்படாவிட்டால் 29ஆம் திகதி பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *