வாகன விபத்துக்களில் 975 பேர் பலி – சாரதிகளுக்கு விசேட கோரிக்கை

Aarani Editor
1 Min Read
Road Accidents

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 975 பேர் உயிரிழந்ததாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

வாகனத்தை செலுத்தும் போது சாரதிகளுக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தினாலேயே அதிக விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் சுரந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

வாகனங்களை செலுத்தும் போது நித்திரை ஏற்படும் சந்தர்ப்பங்களில் வாகனத்தை சுமார் 20 நிமிடம் நிறுத்தி, ஓய்வெடுத்ததன் பின்னர் மீண்டும் பயணிக்குமாறும் அவர் வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல் தூர பகுதிகளுக்கு பயணிக்கும் போது குறைந்தபட்சம், ஒன்று அல்லது இரண்டு மணித்தியாலங்களுக்கு ஓய்வெடுக்குமாறும் இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் சுரந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *