ஹிக்கடுவ கடலுக்கு நீராடச் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்.

Aarani Editor
1 Min Read
Beach Accident

ஹிக்கடுவ கடலுக்கு நீராடச் சென்ற வௌிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக ஹிக்கடுவ பொலிசாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.

அதற்கமைய, உயிர் காக்கும் பிரிவினரின் உதவியுடன் குறித்த நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு வேவல கடற்கரைப் பகுதியில் குறித்த நபரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் 43 வயதுடைய நோர்வே நாட்டைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது.

சம்பவ தினத்தன்று உயிரிழந்த நபர் அவரது சகோதரருடன் ஹிக்கடுவ கடலில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *