இந்த ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் இன்று வரை நாடு முழுவதும் மொத்தம் 46 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 31 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்களால் திட்டமிடப்பட்டவை என கூறினார்.
மேலும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த 31 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 100க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 27 கைத்துப்பாக்கிகள் மற்றும் 14டி-56 துப்பாக்கிகள் உட்பட, 41 துப்பாக்கிகளையும் பொலிசார் பறிமுதல் செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
link: https://namathulk.com/
