நாட்டின் அமைதிக்காகவே தாம் போராடியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை கூறினார்.
நாட்டை மீட்டெடுக்கவும் நாட்டின் அமைதிக்காக மாத்திரமே தாம் போராடியதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் இதனை செய்வார்களா இல்லையா என்பது தொடர்பில் தன்னால் கூற இயலாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கமே அதனை தீர்மானிக்கும், போர் இடம்பெற்றது மிகவும் கவலைக்குரிய விடயம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தேசிய பாதுகாப்பினால் பிரச்சினை இல்லை, நாட்டைப் பாதுகாக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறினார்.
link: https://namathulk.com/
