மதுபோதையில் பாடசாலை மாணவர்களை பஸ்சில் ஏற்றிய சாரதி கைது.

Aarani Editor
1 Min Read
Bus Driver Arrested

மதுபோதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் சாரதி ஒருவர் குருநாகல், கட்டுப்பொத்த பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுப்பொத்த பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பஸ் ஒன்றை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் சோதனையிட்ட போது சாரதி மதுபோதையில் இருந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பஸ்சில் 16 பாடசாலை மாணவர்களும், 2 பெற்றோர்களும் பயணித்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட பஜ்சை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சாரதி கட்டுப்பொத்த பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இன்று நாரம்மல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், கட்டுப்பொத்த பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *