பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
மின்னஞ்சல் மூலம் அவருக்கு இவ்வாறு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜேர்மனி, நெதர்லாந்து ஐபி முகவரிகளை வைத்திருப்பவர்களே இந்த மின்னஞ்சல் மிரட்டலை விடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்
