மக்களுக்குச் சொந்தமான காணிகளை அரசுடைமையாக்குவதற்கு எவ்வித அவசியமும் அரசாங்கத்துக்கு இல்லை என, அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் உரித்தை உறுதிப்படுத்த முடியாத காணிகளை அரசுடமைக்குவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறுமாறு வலியுறுத்தி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராhளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் பாராளுமன்றில் நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்னாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் காலப்பகுதியில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டமையினூடாக இந்த விடயம் தெளிவாகின்றது.
அரசாங்கத்துக்கு எதிரான விடயம் என்று தெரிந்தும், எவ்வாறு குறித்த வர்த்தமானி அறிவித்தலை ஆளும் தரப்பு வெளியிடும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
வடக்கு மாத்திரமின்றி நாடளாவிய ரீதியாக உள்ள சகல மக்களும் அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்கியுள்ளனர்.
குறிப்பாக வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் பல பாராளுமன்ற உறுப்பினர்களையும், அவர்கள் தெரிவு செய்துள்ளனர்.
அவ்வாறிருக்கையில் அந்த மக்களின் காணிகளை அபகரிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை.
ராஜபக்ஷக்கள் மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரைப் பார்த்த கண்ணோட்டத்தில் எம்மை பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அதேபோன்று குறித்த வர்த்தமானி அறிவித்தல், வடக்கு மாகாணத்துக்கு மாத்திரமின்றி முழு இலங்கையையும் உள்ளடக்கும் வகையிலேயே வெளியிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
link: https://namathulk.com/
