”சஞ்சாரக உதாவ 2025” சுற்றுலா கண்காட்சி – ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

Aarani Editor
1 Min Read
AnuraKumara Dissanayake

இலங்கையின் சுற்றுலாத் துறையில் பங்குதாரர்களை செயற்றிறனுடன் இணைக்கின்ற நாட்டின் சுற்றுலா கண்காட்சியான ”சஞ்சாரக உதாவ 2025″ ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று ஜனாதிபதி தலைமையில் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு செயற்பாட்டாளர்கள் சங்கம் இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.

நடுத்தர வர்த்தகங்களுக்கும், சுற்றுலாத் துறையில் பிரவேசிக்க விரும்புவோருக்கும் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான சந்தை வாய்ப்புகளை அடையாளம் காண ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

250 வர்த்தகக் கூடங்களைக் கொண்ட இந்தக் கண்காட்சி இன்றும் (23) நாளையும் (24) நடைபெறும்.

இதில் ஹோட்டல்கள், பயண முகவர்கள், விமான நிறுவனங்கள், சுற்றுலா சேவை வழங்குநர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *