ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அடுத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணம் ஜூன் 10 ஆம் திகதி ஆரம்பமாகுமென வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜனாதிபதி தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவிற்கும், பின்னர் சீனாவிற்கும், பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ{க்கும் விஜயம் செய்திருந்தார்.
ஜேர்மனிய பயணம் ஜனாதிபதியின் முதல் ஐரோப்பிய பயணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com/
