வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Aarani Editor
1 Min Read
Harini Amarasuriya

பாராளுமன்ற கட்டட தொகுதியில் இன்றைய தினம் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் காணி உரித்துத் தொடர்பான சிக்கல் குறித்து இந்த விசேட கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கில் காணி உரிமையைத் தீர்ப்பதற்கான முந்தைய அரசாங்கங்களின் திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும், உரிமைகளை வைத்திருக்கும் மக்களிடம் தங்கள் உரிமையை நிரூபிக்க எந்த ஆவணங்களும் இல்லை என்றும் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மக்களின் சந்தேகங்களைப் போக்க முறையான வழிமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் சட்டப்பூர்வ உறுதிப்படுத்தல்களுடன் மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உடன்படுவதாகவும், மக்களின் காணிகளை எந்த வகையிலும் கையகப்படுத்த வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் பிரதமர்; ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *