நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் லபுக்கலை – டொப்பாஸ் பகுதியில் பஸ் விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
குருணாகலில் இருந்து சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த பஸ்சொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளத.
விபத்தில் காயமடைந்த அனைவரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்களில் 19 பெண்களும் 3 ஆண்களும் அடங்குவதாகவும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
Link: https://namathulk.com/
