விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படவில்லை – புலம்பும் நாமல்

Aarani Editor
1 Min Read
Namal Rajapaksa

விடுதலைப் புலிகள் அமைப்பு கருத்தியல் ரீதியில் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை என்பதாலேயே கனடாவில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்றின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்பன வேறு, புலிகளின் அபிலாஷைகள் என்பன வேறு.

இதை புரிந்துகொள்ள முடியாததால்தான் வடக்கில் பெரும் பின்னடைவை அரசாங்கம் சந்தித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தாம் புலிகளுடனேயே போர் செய்ததாகவும் தமிழ் மக்களுடன் அல்ல என தெரிவித்த நாமல், அது எப்படி இனவாதமாக மாறும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *