உள்ளூராட்சித் தேர்தல் – செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை

Aarani Editor
0 Min Read
தேர்தல்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான செலவு அறிக்கைகளை 27 ஆம் திகதி நள்ளிரவுக்குள் சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் விவரங்கள் குறித்த திகதிக்குப் பிறகு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பொலிஸ் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று வேட்பாளர்கள் மீது வழக்குத் தொடருவார்கள் எனவும் தேர்தல் ஆணைக்குழு பணிப்பாளர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

Link: https://namathulk.com

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *