ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தை – காலவரையறையை நீடித்தார் ட்ரம்ப்

Aarani Editor
1 Min Read
ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தை

ஐரோப்பிய ஒன்றியத்துடன், வரிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான காலத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நீடித்துள்ளார்.

அதன்படி, ஜுன் மாதம் 9ஆம் திகதி வரை காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர், நேற்றையதினம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன், சிறந்ததொரு பேச்சுவார்த்தை எட்டப்பட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து இந்த காலவரையறை நீடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

கடந்த மாதம் ஐரோப்பிய ஒன்றிய பொருட்களுக்கு 20 சதவீத வரியை அமெரிக்க ஜனாதிபதி விதித்திருந்தார்.

பின்னர் அந்த வரி 10 சதவீதத்தால் குறைக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தையில் திருப்தியடையாத நிலையில்இ 50 சதவீத வரிகளை விதிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி அச்சுறுத்தினார்.

இது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருந்த போது அதற்கான கால எல்லையை ஜுன் மாதம் 9ஆம் திகதி வரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீடித்துள்ளார்

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *