லுங்கி இங்கிடிக்கு பதிலாக ஆர்.சி.பி அணியில் இணைந்த ஸிம்பாவே வீரர்

Aarani Editor
1 Min Read

ஐ.பி.எல் கிரிக்கெட் 2025 தொடர் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

இந்நிலையில், ஆர்.சி.பி 13 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி, கைவிடப்பட்ட ஒரு போட்டியுடன் 17 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 3 ஆவது இடத்தை பிடித்து பிளேஓப் சுற்றை உறுதி செய்துள்ளது.

நாளை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் பெங்களூரு அணி மோதுகிறது.

லீக் போட்டிகள் முடிவடைந்த பின்னர்இ வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் அவர்களுடைய நாட்டுக்காக சர்வதேச போட்டிகளில் விளையாட சென்றுவிடுவார்கள் என ஐ.பி.எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் பிளேஓப் சுற்றுக்கு முன்னேறிய அணிகள் மாற்று வீரர்களை தேர்வு செய்து வருகின்றன.

அவ்வகையில், லுங்கி இங்கிடிக்கு பதிலாக, ஆர்.சி.பி அணியில் ஸிம்பாவே வீரர் பிளசிங் முசராபானி இணைந்துள்ளார்.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பயிற்சிக்காக தென்னாபிரிக்க அணியுடன் லுங்கி இங்கிடி இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *