அரசாங்கத்திற்கு ஒரு வார காலம் அவகாசம் – துணை வைத்திய நிபுணர்கள் வேலைநிறுத்தம்

Aarani Editor
1 Min Read
அரசாங்கத்திற்கு ஒரு வார காலம் அவகாசம்

மருத்துவர்களின் கோரிக்கைகள் தொடர்பில், அரசாங்கத்துக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

கூடுதல் பணி மற்றும் விடுப்பு கொடுப்பனவுகளைக் குறைப்பது தொடர்பாக, திருத்தப்பட்ட சுற்றறிக்கையை ஒரு வாரத்திற்குள் வெளியிட வேண்டும்.

இல்லையேல் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

சங்கத்தின் நிர்வாகக் குழு இந்த முடிவை எட்டியுள்ளதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை இணை சுகாதார பட்டதாரிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் பதவி உயர்வு பிரச்சினை உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து, ஆய்வக விஞ்ஞானி சேவை மற்றும் துணை மருத்துவ சேவையின் நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள் இன்று காலை 8 மணி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காவிட்டால், வேலைநிறுத்தம் தொடரும் என துணை மருத்துவ நிபுணர்களின் கூட்டு கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *