3 போலி கடவுச்சீட்டுகளை வழங்கிய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் கைது

Aarani Editor
0 Min Read

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவரைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பாதாள உலகக் குழுவின் உறுப்பினரான’கெஹெல்பத்தர பத்மே’வுக்கு 3 போலி கடவுச்சீட்டுகளை வழங்கிய குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *