பிளவுப்படும் SJP – கட்சியின் முடிவுகளுடன் உடன்பட வேண்டுமென மூத்த உறுப்பினர்கள் வலியுறுத்து.

Aarani Editor
1 Min Read

கட்சிக்குள் என்ன பிரச்சினைகள் இருந்தாலும் கட்சியின் முடிவுகளுடன் உடன்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் மூத்த உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள் சமீபத்தில் தங்கள் பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பிறகு உள்ளூராட்சி அமைப்புகளுக்கான பிரதிநிதிகளை நியமிப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாகவே அவர்கள் பதவி விலகியதாக கூறப்படுகின்றது.

மேலும், பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, ஹொரவ்பொத்தானை தொகுதி அமைப்பாளர் அனுர புத்திக, தம்புள்ளை தொகுதி அமைப்பாளர் சம்பக விஜேரத்ன, ரத்தோட்டை தொகுதி அமைப்பாளர் மற்றும் துணை தேசிய அமைப்பாளர் ரஞ்சித் அலுவிஹாரே, நுவரெலியா மாவட்ட இணை அழைப்பாளர் அனகிபுர அசோக செபால, காலி தொகுதி அமைப்பாளர் பந்துலால் ஆகியோர் தங்கள் பதவி விலகல் கடிதத்தை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், உள்ளூராட்சி அமைப்புகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி பிரதிநிதிகளை நியமிப்பதில் நெருக்கடி அதிகரித்து வருகின்றது.

மேலும் கட்சித் தலைமை எடுத்த முடிவுகளால் பல தொகுதி அமைப்பாளர்கள் வருத்தமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கட்சி முடிவுகளின்படி செயற்படுவது அனைத்து கட்சி உறுப்பினர்களின் பொறுப்பு என்பதை கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *