விரைவில் அமைச்சரவை மாற்றம் அல்லது பிரதமரின் பதவியில் மாற்றம் ஏற்படும் எனும் செய்திகளைத் தாம் மறுப்பதாகவும் இதுபோன்ற கூற்றுக்கள் ஆதாரமற்றவை எனவும், அவற்றைப் பரப்புபவர்கள் ‘தலை சரிபார்க்கப்பட வேண்டும்’ எனவும் அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும், அரசாங்கத்துக்குள் எந்த உள்மோதல்களும் இல்லை என்பதை வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தியின் விரிவாக்கம் நிறைவடைந்துள்ளது.
கொழும்பு மாநகர சபையின் கட்டுப்பாட்டை நாங்கள் ஒருங்கிணைத்துள்ளோம்.
எங்கள் மேயராக பல்தாசர் ஏற்கனவே மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அதை அதிகாரபூர்வமாக அறிவிப்பது மட்டுமே மீதமுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Link: https://namathulk.com/
