தொடர் அழுத்தத்திற்கு உள்ளாகும் அரசாங்கம் – இலங்கை வரும் ஐநாவின் உயர் அதிகாரி

Aarani Editor
1 Min Read
ஐக்கிய நாடுகள் சபை

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், இந்த மாதம் அல்லது ஜூலை ஆரம்பத்தில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இலங்கையின் வெளியுறவு அமைச்சக தரப்புக்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த விஜயத்திற்கான உறுதியான திகதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இதன்படி, கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.

கடைசியாக, 2016 பெப்ரவரியில், மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது ஜெய்த் ராத் அல் ஹசைன் ஆணையாளராக இலங்கைக்கு வருகைத் தந்தார்.

இந்தநிலையில், 2022 ஒக்டோபரில் தனது கடமைகளை ஏற்றுக்கொண்ட ஒஸ்திரிய நாட்டவரான துர்க்கின் இலங்கை பயணம் முக்கியத்தும் மிக்கமாக அமைந்துள்ளது.

சர்வதேச சமூகத்தால் எழுப்பப்பட்ட மனித உரிமைகள் கவலைகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது என இலங்கை அரசாங்கம் தடுமாறும் நிலையில் அவரின் பயணம் அமைகிறது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *