கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை – ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்தின் தற்போதைய நிலை தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
இதன்படி, குறித்த தொழிற்பயிற்சி நிறுவனத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், அந்த நிறுவனத்திற்கான அதிபர் நியமனத்தின் போது வெளிப்படையாக விண்ணப்பங்களைக் கோருமாறு வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது அவர் இந்த விடயத்தை வலியுறுத்தினார்.
Link: https://namathulk.com
