உறவினர்களை சந்திக்க மஹிந்தானந்த – நளினுக்கு மாதமொருமுறை அனுமதி

Aarani Editor
0 Min Read
Nalin Fernando

கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ ஆகியோர் குடும்பத்தார் அல்லது நெருங்கியவர்களைச் சந்திப்பதற்கு மாதத்துக்கு ஒருமுறை மாத்திரமே அனுமதி வழங்கப்படுமென சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது சகல கைதிகளுக்கும் பொருந்தும் சட்டமாகும்.

வழக்கமாக ஒரேநேரத்தில் மூவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுமென்று சிறைச்சாலை ஆணையாளர் காமினி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இரு முன்னாள் அமைச்சர்களும் ஒரே பொதுவான இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கினறன.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *