குருந்தூர்மலையில் கைதான இரு விவசாயிகளும் நீதிமன்றால் விடுவிப்பு

Aarani Editor
1 Min Read
Kurunthurmalai

முல்லைத்தீவு – குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகள் இருவரையும் வழக்கிலிருந்து முல்லைத்தீவு நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது.

குருந்தூர்மலைப் பகுதியில் உள்ள தங்கள் பூர்வீக வேளாண்மை நிலங்களில் கடந்த மே 10 ஆம் திகதி, பயிர் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விவசாயிகள் இருவர் முல்லைத்தீவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றில் நீதிபதி ரீ. பிரதீபன் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விவசாயிகள் ,ருவரும் விடுவிக்கப்பட்டனர்.

விவசாயிகள் மீது வழக்கை தொடர்ந்து நடாத்தக்கூடிய அடிப்படை முகாந்திரங்கள் இல்லை எனவும், குறித்த பிரதேசம் இன்மும் தொல்பொருள் திணைக்களத்துக்குரிய பிரதேசம் என வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை என்பதை வழக்குத்தொடுநர் தரப்பு ஏற்றுக்கொண்டது.

இதனையடுத்து விவசாயிகள் இருவரும் குறித்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

வழக்கில் விவசாயிகள் சார்பாக முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தின் பத்திற்கும் அதிகமான சட்டத்தரணிகள் முன்னிலையாகி வாதிட்டனர்.

இதேவேளை குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *