இந்தியாவில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா தொற்று

Aarani Editor
1 Min Read
IndiaCOVIDSurge

இந்தியாவில் ஒரே நாளில் 5,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதால் முகக்கவசம் அணிவது அவசியம் என அங்குள்ள மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் போதிய நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 08 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையென மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது.

கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,000 ஐ நெருங்கியுள்ளது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *