சித்துப்பாத்தி மனிதப்புதைக்குழியில் இதுவரை 19 எலும்புக்கூடுகள் அடையாளம்.

Aarani Editor
1 Min Read

யாழ்- அரியாலை, சித்துப்பாத்தி இந்துமயானத்தில் காணப்பட்ட மனிதப்புதைகுழி ஆரம்பகட்ட பரீட்ச்சாத்த அகழ்வின் போது, 19 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டுள்ள 19 எலும்புக் கூடுகளும் சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குறித்த எலும்புக்கூடுகளை நீதிமன்றின் பாதுகாப்பில் வைப்பிலிடுவார் என சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்தார்.

யாழ்- அரியாலை, சித்துப்பாத்தி இந்துமயானத்தில் காணப்பட்ட மனிதப்புதைகுழி பரீட்ச்சாந்த அகழ்வு யாழ்ப்பாணம் நீதவான் நீதமன்ற நீதிபதி ஆ.ஆனந்தராஜா அவர்களின் மேற்பார்வையில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பரீட்சாத்த அகழ்வுப் பணியானது நேற்றுடன் தற்காலிகமாக நிறைவுறுத்தப்படுகிறது.

இந்த மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியானது மேலும் 45 நாட்களுக்கு நீடிக்க நீதவான் ஆ.ஆனந்தராஜா நேற்று அனுமதி அளித்திருந்தார்.

45நாட்களுக்கான அகழ்வுப்பணிக்கான பாதீடு சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதியிடம் ஒப்படைத்துள்ளார்.

இதற்கமைய அடுத்த மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிக்காக உத்தேச திகதியாக ஜூன் 26ம் திகதி நீவான் அனுமதித்துள்ளார்.

குறித்த உத்தேச திகதிக்குள்ளாக சமர்பிக்கப்பட்ட பாதீட்டின் நிதி கிடைக்கப்பெற்றால் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணி உத்தேச திகதியில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *