கொரோனா வைரஸ் தொற்று: கடந்த 24 மணிநேரத்தில் 6 பேர் பலி

Aarani Editor
0 Min Read
CovidUpdate

இந்தியாவில் கடந்த 48 மணிநேரத்தில் 769 புதிய கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் கொவிட் தொற்றினால் 65 பேர் உயிரிழந்ததாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், கேரள மாநிலத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களிலும் அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *